இது தொடர்பாக வங்கதேசத்திற்கான பாகிஸ்தான் துணைத் தூதர் ரபியுசமான் சித்திக்கினை வங்கதேச வெளியுறவுத் துறை அழைத்து கண்டித்ததுடன், கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த பதிவு தவறான உள்நோக்கம் கொண்டதும், திசை திருப்பும் முயற்சியும் ஆகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய தவறான தகவல்கள் மூலம் வரலாற்றினை திரிக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என்றும், இந்த விஷயமானது முறையாக பாகிஸ்தானில் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டு, 'அதிகாரப்பூர்வ மன்னிப்பு' அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.