நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வெள்ளரி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் லாபம்

பண்ருட்டி, ஏப்.28:  ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பண்ருட்டி வட்டத்தில் சிற

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:41 pm

ஜீவ. இராம ஸ்ரீநிவாஸன்

பண்ருட்டி, ஏப்.28:  ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

பண்ருட்டி வட்டத்தில் சிறுவத்தூர், வையாபுரிபட்டணம், ஏரிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சுகள் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடப்படுகிறது. இதன் பழங்களை நேரடியாகவும், சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். பிஞ்சாகவும், பழமாகவும் பயன்படும் வெள்ளரி கோடைக் காலத்துக்கு ஏற்ற மருத்துவ குணம் கொண்ட சிறந்த உணவாகும்.

பண்ருட்டி பகுதி விவசாயிகள் விதை எடுப்பதற்காகவே வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். இது குறித்து சிறுவத்தூர் வெள்ளரி விவசாயி தியாகராஜன் கூறியது: வெள்ளரி 3 மாத பயிர். வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்வதில்லை. வெள்ளரி பழத்தில் உள்ள விதைதான் எங்கள் முக்கிய இலக்கு.

இந்த விதைகளை சுத்தம் செய்து இனிப்பு மற்றும் பாக்கு கலவையில் பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் விதைகளை தண்ணீரில் அலசி காயவைத்து வைத்தால் வியாபாரிகள் வீட்டில் வந்தே வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 150 கிலோ விதை கிடைக்கும். விதை விற்பனை மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைக்கிறது.

விதை நீக்கப்பட்ட வெள்ளரிப் பழம் ஒன்று ரூ. 2 முதல் 4 வரை விலை போகும். இதை வெள்ளரி பழ வியாபாரிகள் தோட்டத்தில் வந்து வாங்கி செல்வர். இல்லை என்றால் தோட்டத்திலேயே போட்டு விடுவோம். பழம் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தோட்ட பராமரிப்பு, மருந்து மற்றும் ஆள் கூலி உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டிவிடும் என்றார் தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.