தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மன்னனுக்கு மணிமுடி...

மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவதலம் அய்யர்மலை அருள்தரும் சுரும்பார்குழலி சமேத ரத்தினகிரீசுவரர் கோயில்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:36 pm IST

மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவதலம் அய்யர்மலை அருள்தரும் சுரும்பார்குழலி சமேத ரத்தினகிரீசுவரர் கோயில். இறைவன் சுயம்பு மூர்த்தம். பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 64-ஆவது தேவார திருத்தலம்.

மன்னன் ஒருவன் தமது நவரத்தின கிரீடம் காணாமல் போனதால் ஈசனைத் துதிக்க, வயதான அந்தணர் ஒருவர் ரத்தினகிரீசுவரரிடம் அந்த கிரீடம் உள்ளதாய் தெரிவிக்க, மன்னன் ரத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியைத் தருமாறு வேண்டினார். வேதியர் வடிவில் வந்த இறைவன், இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரி நீர் கொண்டு நிரப்பினால் மணிமுடியைத் தருவதாகச் சொல்ல, மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரை நிரம்பாததால் கோபம் கொண்டு வேதியரை வாளால் வெட்ட முயற்சித்தார்.

வேதியர் சிவலிங்கத்துக்குள் மறைய, வெட்டு லிங்கத்தில் பட்டு குருதி பீறிட்டது. தெய்வக் குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன் தன்னைத் தானே வெட்டிக்கொள்ள முயற்சிக்க, இறைவன் அவனைத் தடுத்து ஆட்கொண்டு மணிமுடியையும் கொடுத்தருளினார். சுவாமி மேல் வெட்டுத் தழும்பு உள்ளதை இன்றும் காணலாம்.

கோயில் கல்வெட்டுகளில், "இறைவர் மாணிக்க மலை மகாதேவர், மாணிக்க மலை உடைய நாயனார், திருமாணிக்க மலை உடைய தம்பிரான் ஆனார். இறைவி திருக்காம கோட்டமுடைய பெரிய நாச்சியார்' என்ற திருநாமங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பொன்னிடும் பாறைக்கு முன்புறம் உள்ள கம்பத்தைச் சுற்றி நூலால் கட்டி பில்லி, சூனியம், ஏவல், பல்வேறு தடைகள் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 22}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

கரூர்-திருச்சி சாலை குளித்தலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது.

- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.