பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர பேரரசர்கள் போன்றோர் அர்ப்பணிப்போடு உருவாக்கிய எண்ணற்ற கோயில்கள் அந்நியர்கள் படையெடுப்பின்போதும், பராமரிப்பின்மையாலும் சிதிலமடைந்துள்ளன. அந்த வகையில் முதலாம் ராஜராஜன் காலத்தைய வீரபுரம் சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, பேரூர் ஆதீனம் சோணாசலஅடிகளின் பெருமுயற்சியால் ஊர் மக்களின் ஆதரவோடு புதுப்பொலிவைப் பெற்றுள்ளது.
1932 - 33இல் தொல்லியல் ஆய்வு அறிக்கையின்படி, கோயிலில் நான்கு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வீராபுரம் எனப்படும் இந்தத் தலம் முதலாம் ராஜராஜனால் 988 }இல், அதாவது ஐந்தாம் ஆட்சி ஆண்டில் செய்யூர் கோட்டத்தில் நெடுங்குன்ற நாட்டில் உள்ள ஊராக விளங்கியது. முதலாம் ராஜராஜனின் அணுக்க பீமர் படைத்தளபதியான விடங்கன் என்பவர் இறைவனுக்கு உச்சிக் கால அமுது அளிக்க அறக்கட்டளை நிறுவிய செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இளங்கண்ணகன் ஏரன் அருநிலை நம்பியும், உழைச்சானன் நீலகண்டன் என்பவரும், மண்டபத் தூண்களையும், புலியூர் ஊர் தலைவர் தேவன் வயிரமேகன் என்பவர் விளக்குகளை எரிக்க நிலங்களையும் அளித்துள்ளனர்.
இறைவன் உச்சீஸ்வரர். "உஞ்சீஸ்வரத்தாழ்வார்' என்று முன்னர் அழைக்கப்பட்டாலும், இறைவனின் இன்றைய பெயர் வீரமங்களநாதன். இறைவி வீரமங்களநாயகி தெற்கு முகமாய் காட்சி அருளுகிறார். இறைவன் சதுர வடிவ ஆவுடையாராக சுயம்புலிங்க மூர்த்தியாக கிழக்கு முகமாய் அருள்புரிகிறார்.
சோமாஸ்கந்த மூர்த்தி கலை நயத்தோடு காலங்களைக் கடந்து காட்சி தருகிறது. சிவன், பார்வதி அருகருகே அமர்ந்திருக்க, அன்னையின் மடியில் ஒய்யாரமாக முருகன் குழந்தையாக காட்சி தருகிறார். கீழே முயலகன், பூதகணங்கள் பீடத்தை, இரு சிம்மத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. விஷ்ணு, பிரம்மா மகிழ்வோடு காட்சி அளிக்கின்றனர். இறைவன் சந்நிதி எதிரில் நந்தி தேவரும், அருகே தெற்கு நோக்கிய வீராபுரம் மங்கலநாயகியும் காட்சி அளிக்கின்றனர்.
கல்யாண தீர்த்தம் குளக்கரையில் "ஜேஷ்டாதேவி' எனும் சோழர்கால மூத்த தேவி சிலை அமைந்துள்ளது. ஜேஷ்டாதேவிக்கு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 6 மணி வரையிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்போரின் குறைகள் விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
புனிதத் தீர்த்தமாக விளங்கும் கல்யாண தீர்த்தக் குளத்தில் குளித்து எழுந்து இறைவனை வழிபடுபவருக்கு திருமண வரம் கிடைப்பதாக ஐதீகம்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கழுக்குன்றம்} அமிஞ்சிக்கரை வழித்தடத்தில் வீராபுரம் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முல்லைக்கொடி பூத்த விழா
நதிநீர் இணைப்பின் முதல்வன்...

புத்தகக் காட்சியில் இன்று, நாளை

நாளைமுதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்; முதல்முறையாக வாசகா்களுக்கு இலவச அனுமதி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

