வரும் ஏப். 28-இல் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமாஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் ஏப். 30 முதல் மே 2 வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. வசந்தோற்சவம் முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, அன்று காலை தாயாரை சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பப்பட்டு, காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறும்.
இதில், கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் நீரால் சுத்தப்படுத்தப்படும். நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, பூங்கற்பூரம், பச்சை கற்பூரம் சந்தனத்தூள், குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தப்படுத்தபடுகிறது. காலை 9.30 மணி முதல் பக்தா்கள் தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.
இதன் காரணமாக, ஏப்ரல் 28 அன்று கல்யாணோற்சவம் மற்றும் சகஸ்ரதீபாலங்கர ஆராதனைகளை ஆகிய சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
தொடர்புடையது

ஏப். 21, 22, 23, மே 4-இல் டாஸ்மாக் விடுமுறை

உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

