திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆடிப்பூரம் உவந்த  மேல்மருவத்தூராள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நடைபெறுகின்ற பூஜை புனஸ்காரங்களைச் செய்ய  கோயில் அர்ச்சகர்கள் இல்லை.

News image

ஆடிப்பூரம் உவந்த  மேல்மருவத்தூராள்

Updated On :6 ஆகஸ்ட் 2021, 12:26 pm IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நடைபெறுகின்ற பூஜை புனஸ்காரங்களைச் செய்ய  கோயில் அர்ச்சகர்கள் இல்லை. சித்தர் பீடத்தின் கீழ் இயங்கி வரும் வாரவழிபாட்டு மன்றங்கள், சக்திபீடங்களைச் சேர்ந்த பெண்களே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளையும், ஆன்மிக பணிகளையும், சித்தர்பீட தொண்டுகளையும்  செய்து வருகின்றனர். 

இந்திய  நாட்டில், பெண்கள் கோயிலில் பூஜைகளைச் செய்வது காசியில் மட்டும் என கூறப்படுகிறது. அதற்கு அடுத்ததாக, தமிழகத்திலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்தான் நடைபெற்று வருகிறது. 

இங்கு 18 சித்தர்களின் தலைவியாய், அருள்பாலித்து வரும் ஆதிபராசக்தி தேவி இருந்து வருவதால், இந்த கோயில் "ஆதிபராசக்தி சித்தர்பீடம்' என்றே பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. சித்தர்பீடத்திற்கு வருகின்ற பக்தர்கள் கருவறை அம்மனையும், பங்காரு அடிகளாரையும் வழிபாடு செய்ய அலைமோதுகின்ற நிலை உள்ளது.

அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடிமாதம் திகழ்வதால், இந்த பீடத்தில் மாபெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆடி மாதத்தை முன்னிட்டு, ஆடிப்பூர விழாவில் கஞ்சி வார்த்தல், அம்மனுக்கு  பாலாபிஷேகம் ஆகிய இரு நிகழ்ச்சிகள் அடிகளார் முன்னிலையில் நடைபெறும். 

ஏழை பணக்காரர், உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடின்றி பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சியைத் தொட்டிகளில் ஊற்றி, வரிசையில் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 

ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வாக பாலாபிஷேகம் கருதப்படுகிறது. பூரம் நட்சத்திரத்தன்று, மூலவர் சந்நிதியில் உள்ள சுயம்பு திருவுருவத்துக்கு பக்தர்கள்  தாம் கொண்டு வந்த பாலை தம் கையால் பாலாபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதி களில் இருநாள்கள் எளிமையாக நடைபெறுகின்றது. இது மேல்மருவத்தூரில் நடைபெறும் 50-ஆம் ஆண்டு  ஆடிப்பூரத் திருவிழாவாகும்..!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.