புதருக்குள் பரமேஸ்வரன்
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் வடுகக்குடி வட்டத்தில் வள்ளலார் கோவில் பத்து...


திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் வடுகக்குடி வட்டத்தில் வள்ளலார் கோவில் பத்து என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள திடல் சேரியில் பெரிய பழைமையான சிவன் ஆலயம் இருந்ததற்கான அடையாளத்தை கிராம மக்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு, இப்பகுதியை சுத்தம் செய்தபோது கண்டறிந்தனர்.
அங்கு சிவபெருமானின் அருள் திருமேனியாகிய சிவலிங்கம் மட்டும் முட்புதர்களுக்கு இடையே காட்சிதந்தது. பக்தர்கள் கீற்றுக்கொட்டகை ஒன்றை அமைத்து சங்கர நாராயண சுவாமி என்ற திருநாமத்துடன் வழிபடத் தொடங்கினர். தொடர்ந்து சில அன்பர்களின் உதவியால், கடந்த ஜூலை 2013 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்து திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டது. போதிய நிதி வசதியில்லாததால் திருப்பணி வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்று இறைவனின் அருளைப் பெறலாம். (திருவாரூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் திருப்பாம்பரம் அருகில் உள்ளது திடல்சேரி)
தொடர்புக்கு: 98429 51504.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...