/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நனியஞ்சத் தக்கஅவை வந்தால் தங்கண்துனியஞ்சார் செய்வது உணர்வார்-பனியஞ்சிவேழம் பிடி தமூஉம் வேய்சூழ் மலைநாட!

News image
Updated On :31 ஜூலை 2022, 11:15 am


நனியஞ்சத் தக்கஅவை வந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வது உணர்வார்-பனியஞ்சி
வேழம் பிடி தமூஉம் வேய்சூழ் மலைநாட!
ஊழ்அம்பு வீழா நிலத்து. (பாடல்-265)


ஆண் யானையானது பனியால் வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் தழுவிக்கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலைநாடனே! தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒருபோதும் குறிதவறி நிலத்திலே வீழ்வதில்லை. அதுபோலவே, "செய்யத்தக்கது இது' என உணரும் அறிவுடையோர், தமக்கு மிகவும் பயப்படத்தக்கதான துன்பங்கள் வந்தாலும்,  அதற்காக ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்.  "ஊழம்பு வீழா நிலத்து' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.