/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர்களாக ஆக்கி, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலையுமே செய்யமாட்டார்கள்.

News image
Updated On :17 ஜூலை 2022, 11:20 am


அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால்-இகந்து
நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் ஆமை
நனைந்துவா என்று விடல். (பாடல்-263)

உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர்களாக ஆக்கி, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலையுமே செய்யமாட்டார்கள். அப்படி விடுவது, ஆமையைப் பிடித்த ஒருவன், அதனை "நீண்ட குளத்தினுள்ளே போய்க் குளித்து விட்டு வா' என்று அதன் தன்மை அறியாமல் போகவிட்ட செயலொடு ஒக்கும். "நீள் கயத்துள் ஆமை நனைந்து வா என்று விடல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.