சில மாதங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எண்ணிலடங்கா குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் உற்ற துயரம் சொல்லில் அடங்காது. மாதம் மும்மாரிப் பெய்ததாகச் சொல்லப்படும் பழங்காலத்தில்கூட, இத்தகைய மழைவெள்ளம் குடியிருப்புகளை பாதித்திருக்குமா? என்பது அறியப்படவில்லை.
வீடுகளை வெள்ளம் சூழ்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றுள் சில, நமது கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றுள் இன்றியமையாத ஒன்று, "புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அங்குக் குடியேறுதல்'. "உலகநாதர்' எனும் புலவர், "உலகநீதி'யில் இதைக் கூறியுள்ளார்.
"செய்யத் தகுந்த செயல்களை வகையறியாமல் முடிக்க முயலாதே! பொய்க்கணக்கை எப்பொழுதும் பேசாதே! சண்டை நடைபெறும் இடத்திற்குத் தேவையின்றி செல்லாதே!' என்றெல்லாம் அறிவுறுத்திச் செல்லும் அவர், "எல்லார்க்கும் பொதுவான இடத்தில் குடியிராதே!' என்று அறிவுறுத்துகின்றார். அதாவது, "பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்' (ஊருக்குப் பொதுவிடத்தில் குடியிருக்காதே!) (பா.7) என்கிறார். இதைக் கருத்தூன்றிப் படிப்பவர் எவரும், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டடங்களை எழுப்பமாட்டார்கள்.
ஒளவையாரும், தனது பங்குக்கு இது தொடர்பாக "ஆத்திசூடி' யில், "இடம்பட வீடு எடேல்' (18) என்று கூறி, நம்மைச் சிந்திக்க வைக்கிறார். அதாவது, "அளவுக்கு அதிகமாக இடம் இருக்கும்படி வீட்டைப் பெரிதாகக் கட்டாதே!' என்பது இதன் பொருள்.
ஒருவன், தனக்குச் சொந்தமான இடங்களிலெல்லாம், மண்மூடிப் போகுமாறு கட்டுமானங்களை எழுப்பினால், மழைநீர் உறிஞ்சப்பட வழியில்லாமல் வெள்ளம் ஏற்படுகிறது. தனிமனிதனுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் இத்தகைய அறிவுரைகள் மிகவும் பொருந்தும். இத்தகைய அறநூல்களைக் கருத்தூன்றிப் படித்து, அதன்படி நடந்தால், எதிர்காலத்தில் இத்தகைய வெள்ள பாதிப்புகளும், அவற்றால் எழும் துயரங்களும் குறையும் என்பது உறுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


