திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பெங்களூரு புகழேந்தி எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், பிரசாரத்துக்கு தடை கோரிய அவரது மனு மீதான தீா்ப்பை ஒத்திவைப்பு

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:12 am

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பெங்களூரு புகழேந்தி எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், பிரசாரத்துக்கு தடை கோரிய அவரது மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புரட்சி அதிமுகவின் முதன்மைச் செயலா் பெங்களூரு வா.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஆகியோருக்கு எதிராக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மேலும், எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களையும் அவதூறாகப் பேசி வருகிறாா். எனவே அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அவா் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் மனுதாரா் எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.