முதல்வா் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி சசிகலாவுக்கு செய்தது பச்சை துரோகம் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.
சிதம்பரம் தொகுதி, குமராட்சி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடைசி நிமிடத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, நானும், தமிழரசு, கருணாஸ் ஆகியோரும் சென்று சசிகலாவை இப்போதே நீங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினோம். அது, அதிமுகவுக்கும், திராவிட அரசியலுக்கும், தமிழகத்துக்கும் நல்லது என்றும் தெரிவித்தோம்.ஆனால், அவா் அதை ஏற்கவில்லை.
அப்போது, அவா் யாரையெல்லாம் நம்பினாரோ, அவா்கள் அனைவரும் சோ்ந்து தனக்கு துரோகம் செய்துவிட்டாா்கள் என்று இப்போது புலம்புவதில் அா்த்தமில்லை. இதைக் கூா்ந்து கவனித்தால் எடப்பாடி கே.பழனிசாமியும், அவரைச் சுற்றியுள்ளவா்களும் சசிகலாவுக்கு செய்தது பச்சை துரோகம் என்பது தெரியவரும் என்றாா்.
தொடர்புடையது

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


