தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிசயமான அரச மரம்!

பல நூற்றாண்டுகள் தாண்டி வாழக்கூடிய தன்மையுடைய அரச மரத்தை 'அஸ்வதா' என்றும், 'அமிர்தம்' என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

News image
Updated On :11 ஜனவரி 2026, 12:01 am IST

பல நூற்றாண்டுகள் தாண்டி வாழக்கூடிய தன்மையுடைய அரச மரத்தை 'அஸ்வதா' என்றும், 'அமிர்தம்' என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஓங்கி உயர்ந்தும் படர்ந்தும் வளரும் அரச மரம் மனிதர்களும் கால்நடைகளும் இளைப்பாறுவதற்கு நிழலும் தூய காற்றும் தருகிறது. அதிக அளவில் தூய காற்றை வெளியே விடும் தன்மையுடையதாலேயே பொதுமக்கள் கூடும் இடங்களான மைதானங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்களில் அரச மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. காற்றைச் சுத்தப்படுத்து

வதும், தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதும் மட்டுமல்லாது அதிக அளவிலான மருத்துவக் குணங்களும் கொண்டுள்ளது.

ஆனி முதல் ஆவணி மாதம் வரையில் பூக்கும் இந்த மரம் தெய்வத் தன்மையுடையது என நம்பப்படுவதால், இதனை கோயில்களில் வைத்துப் போற்றுகின்றனர்.

அரச மரத்தை வலம் வரும்போது அடி பிரதட்சணம் செய்வது போல, மெல்ல நடந்து 7 முறை மரத்தைச் சுற்றி வலம் வரவேண்டும். அதிகாலை வேளையில் வலம் வருவதே நல்லது.

அரச மரத்தில் கயிறு, துணிகள் இவற்றை நாம் இறுக்கமாகக் கட்டும்போது மர விழுதுகள், கிளைகளில் ஏற்படும் காயங்களிலிருந்து வெளிப்படும் ஈரப்பசை காற்றில் கலந்து நறுமணமாக சுவாசத்தின் வழியே உடலில் சென்று உடல் கோளாறுகளை நீக்கி, ஆரோக்கியம் பெற உதவுகிறது. இதுவே 'அரோமா தெரபி' என்று அழைக்கப்படுகிறது.

அரசமர கொழுந்து இலையைப் பாலில் அவித்து சர்க்கரை சேர்த்துக் கொடுத்துவர காய்ச்சல் தீரும்.

பட்டையை இடித்துப் பொடியாக்கிக் கருகிய சாம்பலில் கொஞ்சமெடுத்து, நீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொடுக்க, விக்கல் தீரும்.

பட்டையின் தூளை குடிநீரில் சிறிது கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும். உடல் வெப்பம் குறையும்.

இந்த மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து பிள்ளைப்பேறு இல்லாப் பெண்களுக்கு எலுமிச்சைப் பழம் அளவு மூன்று நாள் சூதகத்திற்கு முன்பு கொடுத்துவர, சூல் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.