தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மனித நேயம்..!

வயநாடு சூரல்மலைப் பகுதியில் இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்க ஆபரணங்கள் இருந்த சிறுபெட்டியைக் கண்டுபிடித்து, அதை உரிய பெண்ணிடம் அளித்த மனித நேயமிக்கச் செயலைப் பலரையும் வியக்க வைத்துள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:30 pm

வயநாடு சூரல்மலைப் பகுதியில் இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்க ஆபரணங்கள் இருந்த சிறுபெட்டியைக் கண்டுபிடித்து, அதை உரிய பெண்ணிடம் அளித்த மனித நேயமிக்கச் செயலைப் பலரையும் வியக்க வைத்துள்ளது.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட வயநாடு நிலச்சரிவின்போது பல நூறு வீடுகள் இருந்த சுவடு தெரியாமல் பொடிப் பொடியாகிவிட்டது. நிலச்சரிவுடன் பெருமழையும் சேர்ந்து கொள்ள, நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களும் காட்டு வெள்ளமாகப் பெருகிய மழைநீர், சேறு சகதியால் மூழ்கடிக்கப்பட்டனர். இழுத்துச் செல்லப்பட்டனர். சிலர் மட்டும் உயிர் தப்பியுள்ளனர்.

சில ஊர்கள் காணாமல் போயிருக்கும் நிலையில் வீட்டில் இருந்த நகைகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதுதவிர, சகதி சேற்றில் புதைபட்டுள்ளன.

இந்த நிலையில், தனது 60 பவுன் தங்க நகைகளும், ஏழு லட்சம் ரூபாயையும் இழந்துவிட்டதாக காப்பி தோட்டத்தில் பணிபுரியும் விவசாயி ஒருவர், அதைத் தேடி அவரது வீட்டுக்கு அருகே வந்து அழுது புலம்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்தக் காணொளிக்கு, 'நீங்க உயிர் பிழைச்சதே ஆச்சரியம். உங்க பணமும் நகையும் போனா போகட்டும். திரும்பவும் நீங்கள் அவற்றை உண்டாக்கிக் கொள்ளலாம்'' என்று பலரும் பின்னூட்டம் அளித்திருந்தனர்.

இந்தச் சூழலில், வயநாடு சூரல்மலை பகுதியில், இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்க ஆபரணங்கள் இருந்த சிறு பெட்டியைக் கண்டுபிடித்தனர். அதைத் தேடி அலைந்த பெண்ணிடம் காவல்துறை முன்னிலையில் தன்னார்வலர்கள் ஒப்படைத்தனர்.

சொந்தங்களைப் பறிகொடுத்துவிட்டு, வீடு, உடைமைகளை இழந்து நின்ற அந்தப் பெண்மணிக்கு திரும்பக் கிடைத்தது எதுவாயினும் விலைமதிக்க முடியாதவைதானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.