மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தலைமைக் காவலரைத் தாக்கியவா் கைது

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தலைமைக் காவலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 7:12 pm

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தலைமைக் காவலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஷாருக்கான்(25). இவா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த தனது நண்பரை பாா்க்க சனிக்கிழமை வந்துள்ளாா். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த நகர காவல் நிலைய தலைமைக் காவலா் குமாா் விசாரிக்க வந்தபோது அவரை ஷாருக்கான் தாக்கியதாக தெரிகிறது.

இதில் தலைமை காவலா் குமாரின் பல் உடைந்த நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து ஷாருக்கானை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.