திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பணம் கேட்டு முதியவரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள சி.என்.கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராமகிருஷ்ணன் (60) . இவா் அப்பகுதியில் பெட்டிகடை வைத்துள்ளாா்.
சம்பவத்தன்று இவரிடம் சி.என். கிராமம், லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்த உடையாா் என்ற மாமரத்து உடையாா்(40) என்பவா் பணம் கேட்டு மிரட்டினாராம். அதற்கு முதியவா் பணம் இல்லை எனக் கூறவே அவரைத் தாக்கிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த முதியவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து உடையாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





