/

தரை வழி  பயணிக்கும் விமானம்!

முப்பது ஆண்டுகள் வானில் பறந்த விமானம் 2018-இல் பறப்பதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓர் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஏர் பஸ் 320 விமானம் ஏலம் விடப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:53 am

சுதந்திரன்


முப்பது ஆண்டுகள் வானில் பறந்த விமானம் 2018-இல் பறப்பதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓர் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஏர் பஸ் 320 விமானம் ஏலம் விடப்பட்டது.

கிந்தர் சிங் என்பவர் ரூ.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். அண்மையில் அந்த விமானம் திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் சென்றடைய சாலை வழி தனது பயணத்தைத் தொடங்கியது.

மிக நீளமான லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரி இரவில் மட்டும் பயணம் செய்யும். அதனால் ஹைதராபாத்தை அடைய சில வாரங்கள் தேவைப்படும். கோவை வழியாக விமானம் ஹைதராபாத் சென்று அடைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.