டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இளம் வயது தோழன்!

டாட்டா  வர்த்தக சாம்ராஜ்யத்தின்  முடி சூடிய மன்னனாக  இருக்கும் ரத்தன் டாட்டா.  சென்ற டிசம்பர் 28-இல்  தனது 84 ஆவது  பிறந்த நாளைக் கொண்டாட   நட்சத்திர ஹோட்டலிலோ,

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:19 am

சக்ரவர்த்தி

டாட்டா வர்த்தக சாம்ராஜ்யத்தின் முடி சூடிய மன்னனாக இருக்கும் ரத்தன் டாட்டா. சென்ற டிசம்பர் 28-இல் தனது 84 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட நட்சத்திர ஹோட்டலிலோ, தனது வீட்டிலோ பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்யவில்லை. ஐம்பது பேர்களைக் கூட அழைக்கவில்லை கேக் கூட ஆர்டர் செய்யவில்லை. தனது வீட்டில் தனது தோழன் ஷாந்தனு நாயுடுவுடன் ஒரு கப் கேக் வாங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.

பல ஆயிரம் கோடி புரளும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவான ரத்தன் டாட்டா தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடியிருப்பதால் ரத்தன் டாட்டாவைப் ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

ரத்தன் டாட்டாவின் நண்பரான ஷாந்தனு நாயுடுவுக்கு 28 வயதுதான் ஆகிறது. டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷாந்தனு, வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய்களைக் காக்க இரவில் ஒளிரும் பட்டைகளை கழுத்தில் சமூக அலுவலர்களுடன் சேர்ந்து அணிவிக்கத் தொடங்கினார். ஊடகங்கள் ஷாந்தனுவை பாராட்ட அதுரத்தன் டாட்டா கவனத்திற்கு வந்தது. ஷாந்தனுவை அழைத்துப் பாராட்டினார். விரைவில் ஷாந்தனு ரத்தன் டாட்டாவின் நெருங்கிய நண்பரானார்.

மேற்படிப்பிற்காக ஷாந்தனு அமெரிக்க சென்று படித்து பட்டம் பெற்ற நாளில் ரத்தன் டாட்டாவும் விழாவில் கலந்து கொண்டார். தனியாக வாழும், முதியோரின் பேச்சுத் துணைக்காகவும், கவனித்துக் கொள்ளவும் இளைய தலைமுறையினர் கொண்ட குழுவையும் ஷாந்தனு நடத்தி வருகிறார். ஷாந்தனு அமெரிக்காவிலிருந்து மும்பை திரும்பியதும், டாட்டா தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். ரத்தன் டாட்டாவின் தோள் மேல் கை போட்டு பேசும் அளவுக்கு ரத்தன் ஷாந்தனு நட்பு இறுகிப் போயுள்ளது.

ரத்தன் டாட்டாவின் சுய சரிதை தயாராகிறது. சுயசரிதையை வெளியிட 2 கோடி ரூபாய் தர பிரபல புத்தக நிறுவனமான "ஹார்ப்பர் கோலின்ஸ்' முன்வந்துள்ளது. ரத்தன் டாட்டா குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள், ரகசியங்களாக டாட்டாவால் வைக்கப்பட்ட தகவல்களையும் ரத்தன்சுய சரிதை மூலம் பகிர்கிறார். டாட்டா சுயசரிதையை ரத்தன் சொல்ல, மத்திய அரசில் முன்னாள் உயர் அதிகாரியாகப் பணி புரிந்த தாமஸ் மாத்யு எழுதுகிறார். சுய சரிதை இந்த ஆண்டு நவம்பரில் வெளியாகும் ..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.