கர்நாடகத்தின் மங்களூரை அடுத்த கடற்கரைப் பகுதிகளில் யக்ஷகானம் மிகவும் பிரபலம்.
இந்த ஆடல் பாடல் நாடகக் கலையை அரசுப் பள்ளியில் மாணவர்கள் கற்க இயலவில்லை. இதற்கு ரூ.500 மாதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மங்களூரைச் சேர்ந்த சகோதரர்கள் விஸ்வநாத், திவாகர் பத்முஞ்சா ஆகிய இருவரும் இந்தக் கலையை இலவசமாகவே கற்றுத் தந்து வருகின்றனர். இதோடு, சுற்றுச்சூழல் மேம்பாடு அடைய இலவசமாக மரக்கன்றுகளை அளித்து, வளர்க்க வைத்தும் வருகின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் இரவு வரை மூன்று தனித்தனி வகுப்புகளை நடத்தி, பயிற்சி அளித்து வருகின்றனர். இதுவரை 40 பேரின் அரங்கேற்றமும் செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களைக் கேட்டபோது, கூறியதாவது:
ஐநூறு ஆண்டுக் கலையை அழியாமல் பாதுகாக்க இலவசப் பயிற்சியை அளிக்கிறோம்.
நாடகம், நடனம், இசை, உரையாடல், ஆடை, அலங்காரம்- இவை அனைத்தையும் கொண்ட கலை இது. மாலை 6 மணிக்குத் தொடங்கி, மறுநாள் விடியற்காலையில் நிகழ்ச்சி நிறைவடையும். மந்தார்தி துர்கா பரமேஸ்வரி கோயிலில் அடுத்த 20ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சி நடக்க, ஒப்பந்தமாகிவிட்டது என்றால் கலையின் அருமையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
வழக்கமாக, நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இந்தக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாநிலத்தில் 940 நிகழ்ச்சிகள் நடைபெறும். இவற்றில் 160 இடங்களில் நிரந்தரமாக நடைபெறும். மற்றவை பல்வேறு இடங்களில் சென்று நடத்தப்படும்.
கட்டில் துர்கா பரமேஸ்வரி கோயிலிலும் யக்ஷகான வேண்டுதல் உண்டு.
மதங்கள் சார்ந்த இருப்பிடங்கள் அளித்த சிக்கலால், கர்நாடகத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அரசு தடைவிதித்துவிட்டது. இதனால், யக்ஷ கான கலைக்கும் சிக்கல் வந்துவிட்டது. மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, இரவு 10 மணிக்குள் முடிக்கிறோம்.
கன்னடம், துளு, ஹிந்தி, ஆங்கிலம், கொங்கனி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலும் நடத்துகிறோம். கேரள மாநிலத்தில் இந்தக் கலை சற்று வித்தியாசமாக நடத்தப்படுகிறது'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


