தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வேக வைக்காமல் சோறு

அரிசியைக் கழுவி ... பாத்திரத்தில் நீருடன் வேக வைத்தால்தானே சாதமாகும்? ஆனால்   அஸ்ஸாமில் விளைவிக்கப்படும்   "போக செளல்' அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம்.

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 11:29 am

அரிசியைக் கழுவி ... பாத்திரத்தில் நீருடன் வேக வைத்தால்தானே சாதமாகும்? ஆனால்   அஸ்ஸாமில் விளைவிக்கப்படும்   "போக செளல்' அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம். இந்த மாயாஜால அரிசியை  நாற்பது  நிமிடம் நீரில் ஊற வைத்தாலே சாதமாகிவிடும்.  சாப்பிடலாம்..!

தெற்கு அஸ்ஸாமில் கோடை காலத்தில் (ஜூன் முதல் டிசம்பர் வரை )  "போக செளல்'  அரிசியை  நம்பியிருக்கிறார்கள்.  போக செளல்'  அரிசியை  "சேற்று அரிசி'  என்றும்  அழைப்பார்கள். 

அஸ்ஸாமின் நல்பாரி, பார்பேட்டா, கோல்பாரா, காமரூப், டரங், துப்ரி, சிரங், போங்கையாகோன், கோக்ராஜ்ஹர், பக்சா பகுதிகளில்  "போக செளல்' பயிராகிறது. அஸ்ஸாம் நகர்ப்புற மக்கள்  "போக செளல்'  அரிசியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை.  

வயலில் உழைக்கும் மக்கள் "போக செளல்'  அரிசியை   40  நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைப்பார்கள்.  அரிசி  பூ போல விரிந்து சோறு ஆகிவிடும்.  அதை,  தயிர் அல்லது  வெல்லம் அல்லது  வாழைப்பழம் சேர்த்து உண்பார்களாம்.  தரமான   "போக செளல்' அரிசியை பதினைந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் போதுமாம்   மல்லிகைப்  பூ மாதிரியான சோறு ரெடி.  

"போக செளல்'  அரிசிக்கு புவிசார் குறியீடும்  வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.