புத்தகத்தின் விற்பனையை நூல் ஆசிரியரின் பெயர் நிர்ணயித்தாலும், புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் வாசகரை அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து புரட்டிப்பார்க்க வைக்கும். பல வகை நூல்களை ஓரிடத்தில் வைத்திருக்கும் நூலகத்திற்கு எதற்காகப் போகிறோம் ? நூல்களை வாசிப்பதற்குத்தானே!
கேரளத்தில் கண்ணனூர் மாவட்டத்தில் பையனூருக்கு அருகில் இருக்கும் காரையில் என்ற ஊரில் அமைந்துள்ளது லால் பகதூர் நூலகம். இந்த நூலகக் கட்டடத்தின் புதுமையான வடிவமைப்பின் காரணமாக மக்கள் நூலகத்தைப் பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர்.
நூலகக் கட்டடம் பல வகை, பல நிற புத்தகங்களை அழகாக நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் வடிவமைப்பில் கட்டப்பட்டு கவர்ந்திருக்கிறது. செங்கல், கூரை ஓடுகள், சிமெண்ட் கலவை கொண்டு இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் சுமார் 6 ஆயிரம் நூல்கள் வாசகர்களின் வாசிப்பு பசிக்கு தீனி போடுகின்றன.
1967-இல் தொடங்கப்பட்ட இந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ந்தாலும், கட்டடம் மிகவும் பழையதாக இருந்ததால் புதிய கட்டடம் கட்டத் தீர்மானம் ஆகியது. புதிய கட்டடத்தின் வடிவமைப்பு பலராலும் பேசப்பட வேண்டும்... நூலகத்திற்கு மக்கள் நூல்களை வாசிக்க வருகிறார்களோ இல்லையோ... நூலகக் கட்டடத்தை கேரளத்தின் பல இடங்களிலிருந்து மக்கள் பார்க்க வர வேண்டும்...கட்டடம் குறித்து பேச வேண்டும்... அதற்கேற்றவாறு மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமாக கட்டடத்தின் வடிவமைப்பு அமைய வேண்டும் என்று நூலக நிர்வாகக் குழு தீர்மானித்தது.
சிற்பி வெங்காரா கட்டடத்தை வடிவமைத்தார். புதிய நூலகக் கட்டடம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கரோனா காலத்தில் மூடப்பட்ட நூலகம் இந்த ஆண்டு பிப்ரவரி 8 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


