பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காந்தி மகான்...

அக்டோபர் இரண்டு திருநாளாம் யார்க்கும் இனித்திடும் நன்னாளாம் அகிலம் நினைத்திடும் பெருநாளாம் அண்ணல் பிறந்த பொன்னாளாம்! போர் பந்தரில் பிறந்தாராம் மோகன தாசென அழைத்தாராம் போரினை அறவே வெறுத்தாராம் புதுமை வழ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:40 pm

பழ . கருப்பையா

அக்டோபர் இரண்டு திருநாளாம்

யார்க்கும் இனித்திடும் நன்னாளாம்

அகிலம் நினைத்திடும் பெருநாளாம்

அண்ணல் பிறந்த பொன்னாளாம்!

போர் பந்தரில் பிறந்தாராம்

மோகன தாசென அழைத்தாராம்

போரினை அறவே வெறுத்தாராம்

புதுமை வழிகள் வகுத்தாராம்!

அன்பின் வலிமை கண்டாராம்

அனைவரும் சமமெனக் கொண்டாராம்

வன்முறை கேடு என்றாராம்

வல்லரசு தன்னையே வென்றாராம்!

அண்ணல் தலைமை ஏற்றாராம்

அனைவரும் ஒன்று திரண்டாராம்

வெள்ளையர் மிகவும் மிரண்டாராம்

விடுதலை தந்து பறந்தாராம்!

மகாத்மா வாக உயர்ந்தாராம்

மக்கள் உயர உழைத்தாராம்

சகாப்த மொன்று படைத்தாராம்

சத்தியம் வெல்ல வைத்தாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.