தேவையான பொருள்கள்:
பலாக்கொட்டை - 20 - 25
பொட்டுக்கடலை மாவு -3 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி)
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு (நறுக்கியது), கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
பலாக்கொட்டைகளை குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். சூடு ஆறியதும் மேல்தோலை நீக்கி, உள்ளிருக்கும் கொட்டைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த பலாக்கொட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை சேர்க்கவும்.
இதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும். உருண்டை பிடிக்கும் பதம் வந்தவுடன், எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை மெதுவாகத் திருப்பி பொரித்து எடுக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





