17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால், கொழுப்பு கரையும்.

News image
Updated On :10 மே 2026, 4:05 am IST

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால், கொழுப்பு கரையும். நெல்லிக்காயுடன் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் மேலும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் நன்மையளிக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டாலும் அல்லது அதன் சாறை 100 மில்லி அளவு அருந்தி வந்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் எந்த நோயும் வராது.

இஞ்சியை ஜூஸ் செய்தோ, துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், செரிமான பிரச்னைகள் வராது.

வாதத்தால் ஏற்படும் மூட்டு நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால், அவை குணமாகும்.

கீரையை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது உப்பை கரைத்து, அதன் பின்னர் வேக வைத்தால் கீரையின் மணமும் நிறமும் அருமையாக இருக்கும்.

வெண்டைக்காயை வதக்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி புளித்த மோரை சேர்த்தால், மொறுமொறுவென்று இருக்கும்.

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்து நறுக்கினால் கண்ணீர் வராது.

ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து பருப்பை வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.

துவரம் பருப்பு துவையல் தயாரிக்கும்போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால், மணமாகவும் சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் பூண்டையும் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.