மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தினை கொழுக்கட்டை

தினை அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, 4 கிண்ணம் தண்ணீரைவிட்டுக் கொதிக்க விடவும்.

News image
Updated On :25 அக்டோபர் 2025, 6:35 pm

தேவையான பொருள்கள்:

தினை அரிசி - 2 கிண்ணம்

இஞ்சி - 1 சிறிய துண்டு

கடலைப் பருப்பு - அரை மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 4

சீரகம் - அரை மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு

செய்முறை:

தினை அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, 4 கிண்ணம் தண்ணீரைவிட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் ஊற வைத்த தினை அரிசியைப் போட்டு நன்றாக வேக வைக்கவும். தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கிவிடவும். நன்றாக ஆறியதும் கொழுக்கட்டையைப் போலப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.