/

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்

இட்லி அரிசி - 1 கிண்ணம்

உளுந்தம்பருப்பு - 1/4 கிண்ணம்

அவல் பொரி - 1 1/2 கிண்ணம்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தண்ணீர் - 3 கிண்ணம்

சர்க்கரை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி, உளுந்தம்பருப்பு, அவல்பொரி, வெந்தயம் அனைத்தையும் தனித்தனியாக நன்றாகக் களைந்து, 3 கிண்ணம் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை சேர்த்து கலந்து ஆறு மணி நேரம் அப்படியே வைத்து புளித்த பிறகு, உப்பு சேர்த்து கலந்து கனமான தோசையாக ஊற்றி எடுத்தால், சுவையான, மிருதுவான கர்நாடகா ஸ்டைல் பென்ன தோசை தயார். தேங்காய் சட்னி, மிளகாய்ப் பொடி சேர்த்து சாப்பிட கூடுதல் சுவையைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.