அவரைக்காயில் "அவரேகாலு' என்பது ஒரு வகை. கர்நாடகத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் பேலூரில் உள்ள ஹளபேடு ஸ்பெஷல் இது.
இந்த அவரைக்காய் சிறியது. ஆனால் சுவையானது. பொதுவாக, பயிர் நோயால் பாதிக்கப்படாததால் இந்தப் பகுதியில் ஏராளமாக பயிரிடப்படுகிறது. நல்ல புரத உணவு.
முதிர்ச்சி அடையாத காய்களில் வைட்டமின் ஏ, கே அதிகம். புதிய காய்களில் வைட்டமின்-சி அதிகம். டிசம்பர் மாதத்தில் இதன் விற்பனைக்காகவே ஹளபேடில் மாலையில் சந்தை கூடும். இதனை இட்லி, தோசை, உப்புமா, கலவை சாதம், ரசம், சாம்பார், பிசிபேலாபாத், இனிப்புகளில் கூட இணைப்பர்.
ஜனவரியில் பெங்களுரில் மேளா நடக்கும். அதில் இதன் பச்சை ஜிலேபி பிரபலம். அறுபதுக்கும் அதிகமான பண்டங்களை செய்து மேளாவுக்கு வருபவர்களிடம் காட்சிப்படுத்தி விற்பர். இந்த வருடம் விற்பனைக்கு வரத் துவங்கி விட்டது. டிசம்பர், ஜனவரிதான் இதற்கு சீசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரிய வகை கனிமங்கள் விவகாரம்: துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

சப்தமில்லாத செலவும் உண்மையான பக்தியும்!

முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு

மாற்றம் தந்த மதிப்பீடு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


