நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோவைக்காய் உசிலி

முதல்நாள் இரவே பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கோவைக்காயை பொடியாக நறுக்க வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

கோவைக்காய் 300 கிராம்
துவரம் பருப்பு 1 மேசைக் கரண்டி
காய்ந்த பட்டாணி 1 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் 3
காய்ந்த மிளகாய் 4
கடுகு 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

முதல்நாள் இரவே பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கோவைக்காயை பொடியாக நறுக்க வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பட்டாணி ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்திருக்கும் துவரம் பருப்புடன் சேர்த்து கொரகொரவென்று அரைத்துகொள்ள வேண்டும்.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு, அதில் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கி உதிரியாக வரும்போது, கோவைக்காயை சேர்த்து நன்றாகக் கிளறி கீழே இறக்கி ஆறியதும் எடுத்துப் பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.