நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பூண்டு ரசம் 

பூண்டு, மிளகாய் வற்றல்,  மிளகு, சீரகம்,  கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:57 am

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

பூண்டு - 5 பற்கள்
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 2  தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
கரைத்தபுளி  - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2 
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:  

பூண்டு, மிளகாய் வற்றல்,  மிளகு, சீரகம்,  கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெயை விட்டு, தக்காளி, கருவேப்பிலை, பெருங்காய தூள் , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து, புளி,  தண்ணீரை சேர்த்து, மூடிவைத்து நன்கு கொதிக்க விடவும். பிறகு வாணலியில்  நெய் ஊற்றி சூடானதும் பிறகு, கடுகு, மிளகாய்வற்றல்,  பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கும் கலவையை ஊற்றி கீழே இறக்கி கொத்தமல்லியை போட்டு மிளகு தூள் தூவவும். சுவைமிக்க ரசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.