ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

 பாகற்காய்  துவையல் 

விதையை நீக்கி பாகற்காயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:53 am

இல.வள்ளிமயில்


தேவையானவை:

பாகற்காய் - 150 கிராம்
உளுந்து - 2 தேக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
புளி மற்றும் வெல்லம் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

விதையை நீக்கி பாகற்காயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். பின், பாகற்காயை சேர்த்து வதக்கி ஆற விடவும். வதக்கிய பொருட்களுடன் புளி, வெல்லம் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாக அரைக்கவும். அத்துடன் கடுகு. உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, ஆகியவற்றைத் தாளித்து சேர்த்து தட்டில் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.