பாலைவனம் சோலை ஆனது!
கடும் வெப்பம், தோலைத் துளைக்கும் சூரியக் கதிர்கள் காரணமாக பொதுவாகவே ராஜஸ்தான் பூமி வறண்டு இருக்கும். மரங்கள் காய்ந்து கருகிப் போயிருக்கும். தண்ணீருக்காகப் பெண்கள் நீண்ட தூரம் கொளுத்தும் வெயிலில் போக வேண்டிய அவலம். கால்நடைகளின் உணவுக்காக புல் பூண்டு கூட முளைக்காத பூமி.










