சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நிலவில் தடம் பதிக்க...!

உலக விண்வெளித் திட்டத்தில் புதிய வரவு  ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் குறுகிய காலத்திலேயே தனது தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது அந்நாடு.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

எஸ். ராஜாராம்


உலக விண்வெளித் திட்டத்தில் புதிய வரவு ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் குறுகிய காலத்திலேயே தனது தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது அந்நாடு.

2019 - ஆம் ஆண்டு செப்டம்பரில் கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்ற மூவரில் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய "ஹோப்' விண்கலம் கடந்த பிப்ரவரியில் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. செவ்வாயின் வளிமண்டல ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம் அரபு உலகின் முதல் விண்வெளித் திட்டம் என்ற வகையில் சாதனை படைத்தது.

இந்த நிலையில் நிலவுக்கு 2022 - இல் ஓர் ஆய்வு வாகனத்தை (ரோவர்) அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. "ரஷீத்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோவரை ஐக்கிய அரபு அமீரகம் தயாரிக்க உள்ளது.

பத்து கிலோ எடை கொண்ட இந்த ரோவரில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும். நிலவின் தரைப் பரப்பில் இந்த ரோவர் ஆய்வில் ஈடுபடும்.

இதை நிலவில் தரையிறக்க " ஐ பேஸ்' என்ற ஜப்பானிய நிறுவனத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் "ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ஃபால்கன் -9 ராக்கெட் மூலம் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க "ஐ பேஸ்' திட்டமிட்டுள்ளது. தரையிறங்கிய பின்னர் வயர்லெஸ் தகவல் தொடர்பு உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளையும் ஐ பேஸ் அளிக்கும்.

முதலில் 2020 செப்டம்பரில் இந்தத் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தபோது, 2024 - க்குள் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இப்போது இரு ஆண்டுகளுக்கு முன் கூட்டியே செயல்படுத்தவுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ள இந்த ரோவர், நிலவில் இதுவரை அறியப்படாத இடத்தில் தரையிறக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

"ரஷீத்' ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் பட்சத்தில் நிலவின் தரைப்பரப்பில் விண்கலத்தை இறக்கிய அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் ஐக்கிய அரபு அமீரகமும் இணைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.