கரோனா நோய்த் தொற்று பரவல் உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனித இழப்பு மட்டுமின்றி பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, வல்லரசு நாடுகளையே விழிபிதுங்கி நிற்க வைத்துள்ளது கரோனா.
பொது முடக்கத்தை தொடர்ந்து அமல்படுத்தினால்... வறுமையினால் உயிர்பாதிப்பு அதிகரிக்கும் என அறிந்த உலக நாடுகள், பொது முடக்கத்தைக் கைவிட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் சிங்கப்பூர் முன்னோடியாகத் திகழ்கிறது. கரோனா தொற்று பரவலைக் கண்டறிவதற்கான செல்லிடப்பேசி செயலியை முதலில் அறிமுகம் செய்த நாடும் சிங்கப்பூர்தான். ஆனால் வயதானவர்கள்
ஸ்மார்ட் போன்களைக் கையாள்வதைச் சிரமமாக கருதுவதால் 100 சதவீத மக்களை இது சென்றடையவில்லை.
ஆகையால், ஸ்மார்ட் போன், இணையம், செயலி என எதுவும் இல்லாமல் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்
களைக் கண்டறியும் கருவியை சிங்கப்பூர் அரசு மக்களுக்கு அளித்து வருகிறது.
இந்தக் கருவியை வெளியே செல்லும்போது எடுத்துச் சென்றால் போதும், நம் அருகே வருபவர்களின் விவரங்களை அந்த கருவி சேமித்து வைத்துக் கொள்ளும். இந்தக் கருவி வைத்திருப்பவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், இந்தக் கருவியை அரசிடம் ஒப்படைத்தால்போதும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை அது தெரிவித்துவிடும்.
இந்தக் கருவியை சிங்கப்பூர்காரர்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டுப் பயணிகளுக்கும் அரசு வழங்கி வருகிறது. முதலில் வயதானவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்தக் கருவி விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கருவிக்கு அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
100 சதவீதம் மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியலாம் என்று அரசு கருதுகிறது. இதன் மூலம் ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றை மீண்டும் தொடங்கி பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லலாம் என சிங்கப்பூர் அரசு எதிர்பார்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


