வளர்ச்சியடைந்த நவீன நகரங்களில் மெட்ரோ, மோனோ ரயில் போக்குவரத்து போன்ற சேவைகள் இயக்கப்படுகின்றன. எனினும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.
அடுத்ததாக போக்குவரத்துக்கு காலியாக உள்ள ஒரே இடம் வான்வெளிதான். உயரப் பறக்கும் விமானங்களின் பாதையிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் காலியாக உள்ள வான்வெளிப்பகுதியை குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்த பேட்டரி மூலம் இயங்கும் டிரோன்களை வடிவமைப் பதில் உலகம் முழுவதும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிறிய பொருள்களை டிரோன்கள் மூலம் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக டிரோன்களில் மனிதர்களை அமர வைத்துக் கொண்டு செல்லும் புதிய "ஒலோகாப்டரை' ஜெர்
மனியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
இருவர் மட்டுமே அமர்ந்து, தானியங்கியாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒலோகாப்டரில் 8 பேட்டரிகள் உள்ளன.
18 இறக்கைகளுடன் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 35 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
துபை, சிங்கப்பூர், ஹெல்சிங்கி, ஜெர்மனியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஒலோகாப்டருக்கு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஒலோகாப்டரை "வான் டாக்ஸி' யாக பயன்டுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒலோகாப்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தையும் ஜப்பான் செய்துள்ளது. ஒலோகாப்டரை வர்த்தகப் பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கான உரிமத்தைப் பெறும் கடைசி கட்டத்தில் உள்ளதாகவும், 2-3 ஆண்டுகளில் அது முடிவடைய வாய்ப்புள்ளதாகவும் ஜெர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரீஸிலும் இதன் சோதனை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி சோதனை வெற்றி பெற்றால் 2024-இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்ல இந்த ஓலோ காப்டரைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பறக்கும் கார்களாக ஒலோகாப்டர்களை நாம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


