குஜராத் மாநிலத்தில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. இப்போது உலகின் மிகப் பெரிய அலுவலக வளாகம், சூரத் வைர வர்த்தகத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடியால் டிசம்பர் 17-இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரமாண்டங்களின் பின்னணியில் இருப்பவர் அவர்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான 'பென்டகன்' கட்டடம்தான் 80 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமாக இருந்தது. சூரத் வைர வர்த்தக வளாகம், 'பென்டகன்' கட்டடத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
சூரத் நகரத்தில்தான் உலகின் 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்படுகின்றன. இனி வைரம் பற்றி உலகில் எந்தவொரு மூலையில் யார் பேசினாலும் சூரத் வர்த்தக மையமும் பேச்சுகளில் இடம் பெறும்.
சூரத் வைர வர்த்தக மையத்தின் சிறப்புகள்:
35 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 9 செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் 15 தளங்கள் உள்ளன. 15 கட்டடங்களின் மொத்த பரப்பளவு சுமார் 67 லட்சம் சதுர அடிகள். ஒரே சமயத்தில் இந்த வர்த்தக மையத்தில் 65 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும்.
'கனவு நகரம்' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த வளாகத்தின் நோக்கமே ஒரு குடைக்குக் கீழ் வைர வர்த்தக அலுவலகங்களைக் கொண்டுவருவதுதான்.
வைர வர்த்தகத்துக்குப் பிரபலமான சூரத் நகரில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான வர்த்தக நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் சுமார் 4,500 வைர வர்த்தக அலுவலகங்களை இந்தப் புதிய வளாகத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த வளாகத்தில் வைர ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஊக்கம் தரும் விதத்தில், ஏற்றுமதி, இறக்குமதிக்கான சுங்க அனுமதி அலுவலகம், சில்லறை நகை வர்த்தகத்துக்கான வளாகம், சர்வதேச வங்கி வசதிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்ற வசதிகளும், சேவை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் 131 'லிஃப்ட்'கள் செயல்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


