அதே போல நிர்வாகத் திறமை கொண்டவர்களும் சிலர்தான். ஆனால் நாட்டின் நிர்வாகம் அவர்கள் கையில் இருப்பதில்லை. இழப்பு நாட்டுக்குத்தான்.
எனவே ஜனநாயகத்திற்கு மாற்று, "திறன் நாயகம்' (meritocracy) என சிலர் நினைத்தார்கள். சிங்கப்பூர் முன்னணித் தலைவர்கள் பலரும் அப்படித்தான் நினைத்தார்கள். ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் சொன்னது போல அவர்களில் பலரும் எளிய குடும்பங்களில் பிறந்து, கல்வி உதவித் தொகை பெற்று, அயல் நாட்டில் படித்து, நல்ல வேலைகளில் இருந்தவர்கள் என்பதால் திறமைதான் நமது செல்வம், நாட்டினுடைய செல்வமும் அதுதான் என்று நம்பினார்கள்.