வாயு மற்றும் ஆகாய மகாபூதத்தை அதிகம் உள்ளடக்கிய கசப்புச் சுவையைக் கொண்ட மணத்தக்காளி, பொன்னாங்கண்ணிக் கீரை, பாகற்காய், சுண்டைக்காய், மஞ்சள் போன்றவற்றையும், வாயு - நிலம் ஆதிக்கம் கொண்ட துவர்ப்புச் சுவையை உள்ளடக்கிய கடுக்காய், கருங்காலி, தேன், அத்தி, வாழைப்பூ போன்றவற்றையும் சற்று அதிகம் உணவில் சேர்த்துக் குடலின் வழியே ஜீரண கோசங்களில் உறவாடச் செய்தால், அவற்றின் மூலம் சிறுநீர் வெளியேற்றத்தில் சூட்டை அதிகமாக்காமல் குளிர்ச்சியைக் குறைத்து கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையை வெளியேற்றினால் அநேகமாக எறும்புகள் உங்கள் சிறுநீரை திரும்பிக் கூடப் பார்க்காமல் மறுபக்கம் ஓடிவிடும். இதிலுள்ள வேறு ஒரு நன்மை, சிறுநீரகங்களில் க்லேதம் எனும் பிசுபிசுப்பான திரவம் அதிக தடிமனாக இல்லாமல் மெலிந்த திரவமாக வருவதால், அதன் வேலைப் பளுவை எளிதாக்கி, அதன் செயல்திறனையும் கூட்டு