நன்கு கடைந்த வெண்ணெய் நீக்கிய மோரை, லேசாகச் சூடாக்கி, சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, ஓரிரு ஸ்பூன் நெய்யில் கடுகு, ஓமம், கருவேப்பிலைத் தாளிதம் செய்து, சுர்ரென்று மோரில் விட்டு, அதை வெதுவெதுப்புடன் புழுங்கலரிசி சாதத்துடன் நார்த்தங்காய் உப்புக் கண்டத்துடன் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காத சுக்கா ரொட்டியுடன் வேக வைத்த பச்சைப் பயறு, சின்ன வெங்காயக் கூட்டுடன் சாப்பிடலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிட்டு, ஓய்வெடுத்தபின் நடந்தால் என்னவாகும்? மெல்ல மெல்ல உண்ட உணவின் இறுக்கம் நெகிழும். கழுத்து, இடுப்பு, முழங்கால் இவற்றிலுள்ள பிடிப்பு அகலும்.