டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அல்சருக்கு வில்வக்காய்!

 எனக்கு வயது 60. ஐந்து வருடங்களுக்கு முன்பு கொலைட்டீஸ் அல்சர் வந்தது. (வயிற்று வலி மோஷனில் ரத்தம் வந்துவிடும்). நாக்கில் எரிச்சல் இருக்கிறது. மனதில் ஏதும் கஷ்டப்பட்டால் அல்லது கிருமிகள் இருந்தால் இதுப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:04 pm

எஸ். சுவாமிநாதன்

 எனக்கு வயது 60. ஐந்து வருடங்களுக்கு முன்பு கொலைட்டீஸ் அல்சர் வந்தது. (வயிற்று வலி மோஷனில் ரத்தம் வந்துவிடும்). நாக்கில் எரிச்சல் இருக்கிறது. மனதில் ஏதும் கஷ்டப்பட்டால் அல்லது கிருமிகள் இருந்தால் இதுபோல வரும் என்று டாக்டர் கூறுகிறார். இந்தப் பிரச்னையுடன் வயிற்று அல்சர், தூக்கமின்மை, தைராய்டு பிரச்னையும் உள்ளன. எல்லாவற்றுக்கும் ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். 3 வருடங்களுக்கு ஒருமுறை பயாப்ஸி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இவை மாற ஆயுர்வேத மருந்துகள் கூறவும்.?

 ப்ரியா, ஓசூர்.

 பெ ருங்குடல், மலக்குடல் பகுதிகளில் அபான வாயு எனும் காற்றானது செயல்படுகிறது. கெட்டுப் போன பித்த தோஷத்தின் வரவானது, ரத்த நாளங்களின் வழியாக இப்பகுதிகளில் வரும்போது, சீழ் புண்ணாக்கும் அளவுக்கு அழற்சியை ஏற்படுத்துகிறது. அடிவயிற்றுப் பகுதியை இழுத்துப் பிடிப்பது போன்ற வேதனையுடன் மலம் ரத்தத்துடன் வெளியேறும். மலம் கழித்தவுடன் நிம்மதியாக இருக்கும். நாள் முழுவதும் பேதியானது விட்டு விட்டு ஏற்படும். வெளியே பயணம் செல்வதற்கே பயமாக இருக்கும். நாக்கு எரிச்சல், வயிற்றுப் புண் உபாதை போன்றவை பித்தம் கெட்டுள்ளதைத் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு உபாதைக்கும் நீங்கள் ஆங்கில மருந்துகள் சாப்பிடுவதால், இடைச் செருகலாக ஆயுர்வேத மருந்துகளுக்கும் ஆங்கில மருந்துகளுக்குமிடையே குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி தேவை. அப்படிப் பார்த்தால், நாள் முழுதும் மருந்தும் கையுமாக நீங்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் உணவுடன் சேர்த்துச் சாப்பிடக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் இருந்தால் உங்களுக்கு எந்நேரமும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமிருக்காது.

 அந்த வகையில், சங்க பஸ்மம் எனும் ஆயுர்வேத மருந்தை ஒரு சிறிய சிட்டிகை எடுத்துச் சிறிது வெண்ணெய், தேன், சர்க்கரையுடன் சாம்பார் சாதம் சாப்பிட்ட பிறகு, நக்கிச் சாப்பிடவும். அதன் பிறகு ரசம் சாதம் சாப்பிடலாம். இதை மதிய உணவின்போது பயன்படுத்தச் சிறந்த மருந்தாகும்.

 இரவில் கோதுமை மாவைத் தண்ணீர்விட்டுப் பிசையும்போது, ஒன்றிரண்டு ஸ்பூன் (சுமார் 10 மிலி) தாடிமாதிகிருதம் எனும் ஆயுர்வேத மருந்தை உருக்கிச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண், மலப்பைப் புண் ஆறுவதுடன், உடலில் ரத்த அணுக்களும் நன்றாக வளரச் செய்யும் சிறந்த ஆயுர்வேத நெய் மருந்தாகும்.

 மதியம் மற்றும் இரவு வேளைகளில் இதுமாதிரி மருந்துகளைச் சேர்ப்பதால் பித்த வாயுக்களின் கெடுதிகளை நம்மால் குடலிலிருந்து வெளியேற்ற முடியும். காலையில் பச்சைப் பயறை வேகவிட்டு, நன்றாக வெந்ததும் அதில் திக்தகம் எனும் நெய் மருந்தை 5 மிலி கலந்து, பச்சைப் பயறையும் அதில் வெந்த தண்ணீரையும் அருந்துவது, பெருங்குடலில் ஏற்பட்டுள்ள சீழ்ப்புண்ணை ஆற்றுவதற்கு உதவும்.

 கோரைக் கிழங்கும் வில்வக் காயும் சுமார் 6-8 கிராம் வீதம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டராகக் குறுக்கி, வடிகட்டி, உணவின் நடுவே சிறிது சிறிதாகக் குடித்துவர, நீங்கள் குறிப்பிடும் கொலைட்டீஸ் அல்சர் விரைவில் குணமாகும். வேல மரத்தின் பட்டையின் கஷாயத்திலிருந்து தயாரிக்கப்படும் பபூலாரிஷ்டம் எனும் மருந்தை சுமார் 25 - 30 மிலி இரவு உணவிற்குப் பிறகு உடனே சாப்பிடுவது இந்த உபாதைக்குச் சிறந்த மருந்தாக இருக்கும்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.