பல மணி நேரம் கணினியின் முன்னமர்ந்து வேலை செய்தல், தொடைகளை ஆட்டிக் கொண்டே வேலை செய்தல், மனதில் ஏற்படும் வேண்டத்தகாத எண்ணங்களால் உடலும் மனமும் சூடேறி, உடல் பாதிப்புறுதல், பால் கலந்த உளுந்துக் கஞ்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளாதிருத்தல், தேன் குழைத்த அமுக்கரா மற்றும் பூனைக்காலி விதை சூரணம், மகிழ்ச்சியற்ற மனநிலை, மற்றவர் கவனித்துவிடுவாரோ என்ற பயத்துடன் கூடிய பொது அறை, மனைவியானவள் தன் இடப்பக்கமெல்லாமல் வலப்பக்கம் படுத்திருத்தல், மாதவிடாய் நாட்களைக் கவனத்தில் கொள்ளாதிருத்தல், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பெüர்ணமி, பித்ரு பிண்ட தினங்கள், சூர்யோதய அஸ்மன சந்த்யா காலங்களை மதிக்காது உதாசீனப்படுத்துதல் போன்ற ஒரு சில காரணங்களை ஆண்கள் கருத்தில் கொள்ளாமல், சிற்றின்ப சுகத்தில் ஈடுபடுவதன் மூலமாக விந்தணுக்கள் குறைந்துபோய் துன்பப்பட நேரிடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.