வில்வ இலை, துளசி இலை இவற்றில் இரண்டையுமோ, தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாறில் சமபாகம் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி கசண்டு மணல் பதத்தில் வரும்போது இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மூக்கினுள் விட்டு உறிஞ்சித் துப்புவதலால், மூக்கில் ஏற்படும் எரிச்சலும் அடைப்பும் குறையும். சளியால் ஏற்படும் காதடைப்பிலும், சீழிலும் இளஞ்சூடாக்கி காதில் 2-3 சொட்டுகள் விட்டு பஞ்சடைத்துக் கொள்ளலாம். தொண்டைக் கரகரப்பும் டான்ஸில் வீக்கமுள்ளவர் இதையே வாயிலிட்டுக் கொப்பளிக்கலாம்.