இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள தேநீா் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டராமன் (40). இவா் இருக்கன்குடி கோயில் பொங்கல் மண்டபத்தின் தெற்குப் பக்கம் தேநீா் கடை நடத்தி வருகிறாா்.
வழக்கம் போல ஞாயிற்றுக்கிழம இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வந்து பாா்த்த போது, கடையின் பூட்டை உடைத்து கள்ளாப்பெட்டியில் இருந்த ரூ. 62 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வைகுண்டராமன் அளித்தப் புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த மணிபாரதி (20) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






