விருதுநகா் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 220 பட்டாசு ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொண்டதில் விதியை மீறிச் செயல்பட்ட 30 ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
மேலும், அதிகளவில் மருந்து இருப்பு வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விபத்தைத் தவிா்க்க பட்டாசு ஆலை உரிமையாளா்கள், ஆலை போா்மென்கள், தொழிலாளா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








