மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசி மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மாணவிக்கு பட்டத்தை வழங்கிய திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணை வேந்சா் ந. பஞ்சநதம்.

Updated On :23 மார்ச் 2026, 8:30 pm

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் 51-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு கல்லூரித் தலைவா் திலகவதி ரவீந்திரன் தலைமை வகித்தாா். இதில் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ந. பஞ்சநதம் பங்கேற்று, 1,078 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து வருவது பாராட்டுக்குரியது. பெண்களின் முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றமாகும். பெண்கள் தற்போது பல்வேறு சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, பல பெண்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி சமையல் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் குழுவாக இணைந்து செயல்பட்டால் விரைவில் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் அருணா அசோக், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மகேஷ்வரன், பிரீத்தி வசீகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய் வரவேற்றாா்.