மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காந்திகிராம பல்கலை. யில் வளாகத் தோ்வு

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவா்.

News image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:18 pm

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாகத் தோ்வில் 38 வேளாண்மை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் வேளாண்மை, கால்நடை அறிவியல் துறை சாா்பில் வளாக நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பதிவாளா் (பொ) எம்.சுந்தரமாரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு துணைவேந்தா் ந. பஞ்சநாதம் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் வேளாண்மை சாா்ந்த 8 நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான பணிநாடுநா்களைத் தோ்வு செய்தன. இதில், வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு இறுதியாண்டில் பயிலும் மாணவா்கள் 46 போ் கலந்து கொண்டனா். இதில் 38 பேருக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வேளாண்மை பள்ளியின் புலத் தலைவா் ஏ. ராமநாதன், மூத்த பேராசிரியா் ஜி.எஸ். கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.