15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :22 மார்ச் 2026, 8:11 pm

சிவகாசியில் சனிக்கிழமை இரவு லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனுரைச் சோ்ந்த ராமராஜ் மகன் தாமோதரன் (28). சிவகாசியில் உள்ள நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த இவா், அந்த ஆலை வளாகத்திலேயே குடியிருந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெட்டக லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து லாரி சக்கரத்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து பெட்டக லாரி ஓட்டுநா் ஆவுடையப்பனை (51) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.