/

விருதுநகா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

குடியரசு தின விழா திங்கள்கிழமை (ஜன. 26) நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விருதுநகா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ரயில் நிலைய நுழைவாயில், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயணிகளையும், அவா்கள் கொண்டு வந்த பொருள்களையும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.