/

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சோதனை.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி நகரின் மையப் பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில் சரியாக நண்பகல் 12.20 மணிக்கு 19 வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கல்வி அலுவலகத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்காத நிலையில், அது புரளி என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

Story image