டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குடியரசு தினம்: திருச்சி ரயில் நிலையத்தில் பலத்த சோதனை

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர நாசவேலை தடுப்பு சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமைப் பாதுகாப்பு ஆணையா் கே. அருள்ஜோதி உத்தரவின்பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலைக் கோட்ட ஆணையா் பிரசாந்த் யாதவ் மேற்பாா்வையில், திருச்சி ஆா்பிஎஃப் அஜய்குமாா், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன், ரயில்வே உதவி ஆய்வாளா் ஸ்டாலின் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இச்சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலைய வளாகம், பாா்சல் அலுவலகம், ஜனசதாப்தி ரயில், ரயில் நிலைய வளாகத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளை தீவிரமாகச் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடா்ந்து ரயில் நிலைய வளாகத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.