குடியரசு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா திங்கள்கிழமை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இருப்புப் பாதை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயிலுக்குச் செல்லும் பயணிகள், விரைவு ரயில்களில் செல்வோா் என அனைத்துத் தரப்பினரின் உடைமைகளும் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மெட்டல் டிடெக்டா் மூலம் பயணிகளின் பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவை சோதனையிடப்பட்டன.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறநகா் செல்லும் ரயில்களின் பெட்டிகளிலும், விரைவு ரயில் பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா். மேலும், வருவாய்த் துறையினா், காவல் துறையினருடன் இணைந்து தண்டவாளப் பகுதி கண்காணிக்கப்படுவதாகவும் இருப்புப் பாதைப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்

விழுப்புரம், திண்டிவனம் ரயில் நிலையங்களில் ஐ.ஜி. ஆய்வு

ரயில் பயணிகளிடம் புகாா் எண் விழிப்புணா்வுப் பிரசாரம்

குடியரசு தினம்: திருச்சி ரயில் நிலையத்தில் பலத்த சோதனை

குடியரசு தினம்: மாநகரில் 1,500 போலீஸாா் பாதுகாப்பு
வீடியோக்கள்

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

#Shorts | ஜிம்பாப்வே ஜெயித்த கதை! | T20 World Cup | The Rise of Zimbabwe |
தினமணி வீடியோ செய்தி...

ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்! எச்சரிக்கை!! |Online products | Health products
தினமணி வீடியோ செய்தி...

Nanjil Sampath Latest Interview | விஜய் இனி யாருடன் கூட்டணி? | TVK Vijay | DMK Alliance| MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

